Ads (728x90)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இம்மாதம் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய வகையில் பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் மார்ச் 06 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது எனவும், பரீட்சை சூழலை பேணுவதற்கு இடையூறான பாடசாலையாக இருந்தால் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளுக்கு விடுமுறை வழங்குவதற்கும், குறித்த பாடசாலைகளுக்கு உரிய பணியிடங்களை பரிந்துரைப்பதற்கும், கற்றல் முறைகளை மேற்கொள்வதற்கும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget