09 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனியான சுயேட்சை குழுவாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேம ஜயந்த, சந்திம வீரக்கொடி, நளின் பெர்னாண்டோ, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பிரியங்கர ஜயரத்ன, ஜயரத்ன ஹேரத், நிமல் லான்சா ஆகியோர் சுயேச்சைகளாக செயற்படவுள்ளனர்.
16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனி சுயேட்சை குழுவாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச, உதய பிரபாத் கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டிரான் அலஸ், அத்துரலியே ரத்ன தேரர், கெவிந்து குமாரதுங்க, வீரசுமண வீரசிங்க, அசங்க நவரத்ன, மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ, காமினி வலேகொட, ஏ.எல்.ஏ.அதாவுல்லா, கயாஷான், ஜயந்த சமரவீர, உத்திக பிரேமரத்ன ஆகியோரே தனித்து செயற்படவுள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனியான சுயேச்சைக் குழுவாக தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஷ்பகுமார, ஷான் விஜயலால் டி சில்வா, ஷாந்த பண்டார, துஷ்மந்த மித்ரபால, சுரேன் ராகவன், அங்கஜன் இராமநாதன்,சம்பத் தசநாயக்க ஆகியோரே தனித்து செயற்படவுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் சுயேச்சையாக செயற்பட தீர்மானித்துள்ளனர். ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகிய இருவருமே இன்று இதனை அறிவித்துள்ளனர்.
Post a Comment