Ads (728x90)

நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்று உருவானாலும் நானே பிரதமர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டுமாயின் அது என் தலைமையிலேயே ஸ்தாபிக்கப்படும். பிறிதொரு தரப்பினரை பிரதமராக்கி அரசாங்கத்தை கொண்டு செல்ல எவரும் தயாரில்லை. அரசியல் தெளிவற்றவர்களே என்னை பதவி விலகுமாறு குறிப்பிடுகிறார்கள் என மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வரலாற்று காலத்திலும் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம். அரசியல் மற்றும் வரலாற்று சம்பவம் தொடர்பில் தெளிவில்லாதவர்கள் தான் என்னை பதவி விலகுமாறு குறிப்பிடுகின்றனர். பதவி விலகுமாறு பெரும்பாலான தரப்பினர் குறிப்பிடவில்லை.

கொள்கையற்ற வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாது. இடைக்கால அரசாங்கத்திற்கு சகல தரப்பினரது ஆதரவும் அவசியம். ஒருவேளை இடைக்கால அரசாங்கம் என்றதொன்று ஸ்தாபிக்கப்பட்டால் அது என் தலைமைத்துவத்தில் தான் உருவாக்கப்பட வேண்டும். 

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளேன். அவர்கள் எந்நேரத்திலும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். பேச்சுவார்த்தை ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றார்.





Post a Comment

Recent News

Recent Posts Widget