Ads (728x90)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டினை முற்றுகையிட்டு தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டு பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள்  ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளமையால் அங்கு பதற்றமான நிலை உருவாகியுள்ளது

இதேவேளை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி காலிமுகத்திடல் பகுதிக்கு செல்லவிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget