Ads (728x90)

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகும் மேற்படி பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சை 3,844 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகின்றது. இந்தமுறை பரீட்சைக்கு 407,129 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 110, 367 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.

கொவிட்-19 தொற்றுறுதியான பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த பரீட்சைக்கு 590 விசேட தேவையுடையவர்களும் தோற்றவுள்ளனர்.

மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரீட்சை மண்டபத்திற்கு பரீட்சார்த்திகளுக்கு சமூகமளிக்க முடியவில்லையாயின் அதற்கு சலுகை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Post a Comment

Recent News

Recent Posts Widget