நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் பதவி விலகவேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயலும் மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மற்றும் அதன் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் நடந்த கலந்துரையாடலையடுத்து பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுடனான கூட்டத்தையடுத்து கோட்டா கோ கம பகுதியில் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் 78 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தனது பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளார்.
Post a Comment