Ads (728x90)

பலாலிக்கும்-திருச்சிக்கும் இடையில் பயணிகள் விமான சேவையினையும், யாழ்ப்பாணத்திற்கும்-பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவைகளையும் நடாத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையான அளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget