Ads (728x90)

போக்குவரத்து நெருக்கடி காரணமாக தொடர் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன.

வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகளை நடாத்தவும், ஏனைய புதன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களிலும் இணையவழி கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை தொடரவும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

எனினும் தென் மாகாணத்துக்கு உட்பட அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளையும் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை வாரத்தில் 5 நாட்களிலும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தென்மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget