2009 இல் கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் சர்வதேச அமைப்பான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
2009 இல் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நியாயாதிக்கத்தின் அடிப்படையில் சிங்கப்பூரில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரிற்கு தப்பியோடியுள்ள நிலையில் அங்கு அவரை விசாரணைக்கு உட்படுத்தமுடியும் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
Post a Comment