Ads (728x90)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்படும் செய்திகள் யாவும் சபாநாயகரால் மாத்திரம் வெளியிடப்படும் என ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவிப்புகள் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் அவரால் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே அறிவித்தபடி தாம் பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று முற்பகல் அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget