Ads (728x90)

மனித உரிமை செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைப்பதற்கான உத்தரவில் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திடக்கூடாது என ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோலர் வலியுறுத்தியுள்ளார். 

அப்படி செய்தால் அது இலங்கைக்கு மோசமான நாளாக அமையும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாக மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget