இதற்கு பதிலளித்திருந்த இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்ட பின்னர் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.
அத்துடன் இலங்கை, சீனாவிடம் பெற்ற கடன் தொடர்பில் சீனா வியத்தகு முடிவை எடுக்க வேண்டும் என்று அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இந்தநிலையில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள சீன தூதரக பேச்சாளர் ஒருவர், சீன வங்கிகளுடனான கடன் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னரே இலங்கை நிதியமைச்சிடம் சீனா தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விவாதிக்க தமது வங்கிகளை ஊக்குவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் அப்போதைய இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதும் சீன நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் நிதி அமைச்சுக்கும் பரிந்துரைகளை அனுப்பப்பட்டன. எனினும் இலங்கையின் நிதியமைச்சிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
எனவே இது பற்றிய தீர்மானம் இலங்கையிடமே தற்போது உள்ளது என்று சீன தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மொத்த இருதரப்புக் கடன் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 6.2 பில்லியன் டொலர்களாக சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment