Ads (728x90)

அரச துறைக்கான ஆட்சேர்ப்பு மற்றும் ஆட்சேர்ப்பு பரீட்சை முடிவுகள் தொடர்பில் நிதியமைச்சினால் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி அரச சேவை ஆட்சேர்ப்பு பரீட்சைகள் எதனையும் நடத்த வேண்டாம் எனவும், அத்துடன் இதுவரை நடைபெற்ற ஆட்சேர்ப்பு பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிட வேண்டாம் எனவும் நிதியமைச்சு பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேற்று அறிவித்துள்ளது.

இதனால் பாடசாலைகளில் உள்ள அழகியல், மனையியல் மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாதுள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget