Ads (728x90)

சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் (USAID) ஊடாக இலங்கைக்கு  5 வருட காலத்தில் மேலும் 65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யுலிசங் இன்று தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவரின் விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதியுதவி கிடைக்கவுள்ளது. அதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அனைத்து USAID நிதியளிப்புகளும் அன்பளிப்புகள் அல்லது மானியங்களாக வழங்கப்படுவதுடன் கடுமையான கண்காணிப்புத் தராதரங்களைக் கடைப்பிடிக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

Post a Comment

Recent News

Recent Posts Widget