ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தொழில் நிபுணர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தற்போதுள்ள அரசியல் முறைமை நிராகரிப்பதால், அவர்கள் விரும்பிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,000 இலிருந்து 4,000 ஆகக் குறைக்கப்படும். “மக்கள் சபை” வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரம் தவிசாளர் என்ற ஒற்றைத் தலைவருக்குச் செல்வதற்குப் பதிலாக தவிசாளர் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட வேண்டும். அடுத்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு சட்ட வரைவு தயாரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசியலில் ஊழல் தலைதூக்க முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறையே என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உடனடியாக விருப்பு வாக்கு முறையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு முறை கொண்ட தேர்தல் முறைமைக்கு செல்ல வேண்டும் எனவும், தேர்தலில் செலவிடப்படும் நிதிக்கும் தேர்தல் சட்டம் மூலம் வரையறைகள் இடப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Post a Comment