Ads (728x90)

கோட்டாபய ராஜபக்ஸ அரசின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட அப்போதைய அமைச்சரவை, மத்திய வங்கியின் ஆளுநர்களான பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஸ்மன், அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் நிதிச்சபை மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கலாநிதி மஹீம் மென்டிஸ், கலாநிதி அத்துலசிறி சமரகோன் மற்றும் கலாநிதி நெவிஸ் மொராயஸ் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனுக்கள் மீதான விசாரணைக்கு அனுமதி வழங்கிய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், உடனடியாக கணக்காய்வை மேற்கொண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget