இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2022 ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் தொடர்ச்சியான உதவி இல்லாமல் நிலைமை மோசமடையக்கூடும் என்று உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் மூன்று மாத காலத்திற்கு 1 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு உணவை வழங்குவதற்காக, உலக உணவுத்திட்டம் 1,475 மெற்றிக் தொன் அரிசி மற்றும் 775 மெற்றிக் தொன் இரும்புச் சத்துள்ள அரிசியை விரைவில் விநியோகிக்கவுள்ளது.
ஊட்டசத்து உதவி தொடர்வதை உறுதி செய்வதற்காக, அரசாங்கத்தின் திரிபோஷ திட்டத்துக்கு சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களை வழங்குவதற்கு அரசு மற்றும் நன்கொடையாளர்களுடன் இணைந்து செயற்படுவதாக உலக உணவுத்திட்டம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment