இச்சந்திப்பில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்குமாறு உறவினர்கள் சார்பில் நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டையே பின்பற்றி வருகிறோம்.
அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலையில் உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment