Ads (728x90)

தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக ஆதிவாசி பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதில்லை என பழங்குடியினத் தலைவி லிசினோனா தெரிவித்துள்ளார்.

தலுகான கிராமத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

உணவு மற்றும் பாடசாலைப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் திம்புலாகல பழங்குடியின கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்லவதை முற்றாக கைவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையால் பட்டினியோடு நாளை கழிப்பவர்கள் வீட்டிலும், பாடசாலையிலும் மயங்கி விழுந்து விடுவதாகவும் குறிப்பிடுகிறார்.

தற்போதைய சூழ்நிலையில் கூலி வேலையை இழப்பதால் பழங்குடியின சமூகம் வீடற்றவர்களாக மாறியுள்ளதாகவும், சிலர் சவர்க்காரம் கூட இல்லாமல் குளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget