Ads (728x90)

போதைப்பொருளுக்கு அடிமையான 81 மாணவர்கள் கடந்த 9 மாதங்களில் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் ஒரு வயது முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், 78 பேர் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருள்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானவையாக இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget