இந்தத் தகவல் கணக்கெடுப்பில் தெரியவந்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.
தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர் என்றும், இந்த பணம் குழந்தைகளின் கல்வி மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
தற்போது மக்கள் தனியார் அடமான மையங்களை நாடும் போக்கு காணப்படுவதாகவும், இதற்கு இம்மையங்கள் மக்களுக்கு அதிகளவு பணம் வழங்குவதே காரணம் எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment