பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்கள மொழி மூல பாடசாலைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் கணிம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் பாரியளவில் வெற்றிடமாகி இருந்து வருகின்றது. இந்த நீண்ட கால பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற 8.000 ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு முன்பாக எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு முன்னர் அந்த நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த வருடத்தில் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்துள்ளது. அதற்கிணங்க மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் நிலவும் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment