Ads (728x90)

இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து உரிய  பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளத்தை வழங்கிய மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

 50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வவுனியா, கண்டி, மாத்தறை, குருநாகல் பிரதேச காரியாலயங்களில் மூன்று நாட்களுக்குள் விரைவு சேவையின் ஊடாக கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget