Ads (728x90)

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நாளை  திங்கட்கிழமை 23ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ந்து மின் சேவையை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பாடசாலையூடாக 2 இலட்சத்து 78 196 பரீட்சார்த்திகளும், 53,513 தனியார் பரீட்சார்த்திகளுமாக 3 இலட்சத்து 31,709 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அதற்கமைய, நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை நிலையங்களும், 317 ஒருங்கிணைப்பு நிலையங்களும், 32 பிராந்திய சேவை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget