Ads (728x90)

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளிலிருந்தும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த 3 வழக்குகள் தொடர்பில் நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விளக்கமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் நேற்றுமுன்தினம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழான கைது தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நீதிமன்றிற்கு விளக்கமளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைக்கு இது தொடர்பில் அறிவித்து வசந்த முதலிகே நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டு 167 நாட்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வசந்த முதலிகே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கடந்த வருடம் ஓகஸ்ட் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் நவம்பர் 21 முதல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget