Ads (728x90)

நாட்டில் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்து வாழும் சுமார் 39 லட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இவற்றை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டம் விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்குவதற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல்லை 100 ரூபாவுக்கு கொள்முதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget