ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு தடையாக இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பளம் வழங்குதல், கடன் சேவைகள், ஓய்வூதியம், மருத்துவ சேவைகள், மாதாந்த சமுர்த்தி மானியங்கள், முதியோர்களுக்கான நிதி, ஊனமுற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிதி, சிறுநீரக நோயாளிகளுக்கான நிதி, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி என்பவற்றுக்கு மாத்திரமே நிதி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
.jpg)
Post a Comment