Ads (728x90)

ஜனவரி மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனவரி 31ஆம் திகதி வரையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். சுற்றுலாத்துறையின் ஊக்கத்தால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரியில் 82,327 சுற்றுலாப் பயணிகளும், 2023 ஜனவரியில் 102,545 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரியில் 96,507பேரும், மார்ச் மாதத்தில் 106,500 பேரும், ஏப்ரலில் 62,980 பேரும், மே மாதம் 30,207 பேரும், ஜூன் மாதம் 32,856 பேரும், ஜூன் மாதம் 47,293 பேரும், ஜூலை மாதம் 47,293 பேரும், ஓகஸ்ட் மாதம் 37,760 பேரும் நவம்பரில் 59,759 பேரும், டிசம்பரில் 91,961 பேருமாக 2022 இல் மொத்தம் 719,978 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget