கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரதேசங்களுக்கு அருகாமையில் இன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளது.
வரிக் கொள்கைகளின் நியாயமற்ற தன்மை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கவே இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
இது தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எனினும் அதிகாரிகள் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
40 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க தங்கள் சம்மதத்தை தெரிவித்துள்ளதாகவும், இதில் அரசதுறை மட்டுமல்லாது தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் அடங்குகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment