Ads (728x90)

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்வது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு இந்த சட்டம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சாய்பி தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் நீதித்துறை மீளாய்வு மேற்கொள்ளப் படவில்லை. எனவே பல அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டதாக தம்மிடம் முறையிட்டுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடை சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அமைக்க அரசாங்கம் உறுதியளித்தது.

அத்துடன் கடந்த அரசாங்கம், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு நடைமுறையில் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியதாக ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைவதையே தாம் எதிர்பார்ப்பதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய நிபுணர்களும் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget