Ads (728x90)

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி  மட்டக்களப்பை சென்றடைந்தது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் கொள்கைப் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து பெப்ரவரி 04ந்திகதி மட்டக்களப்பு நோக்கி ஆரம்பித்த இப்பேரணி நேற்று 07ந்திகதி மட்டக்களப்பு நகரை சென்றடைந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், அரசியல் பிரதிநிதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் அமைப்புக்கள் என பலதரப்பினரும் கலந்து கொண்டனர்.




Post a Comment

Recent News

Recent Posts Widget