Ads (728x90)

ரி20 மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு மின்னொளியில் நடைபெற்றது. 

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் உடேஷிகா பிரபோடானி மற்றும்  கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் 141 ஓட்டங்களை பெற்றால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 141 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget