Ads (728x90)

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி பதவிக் காலம் 5 வருடங்களே. அதில் மாற்றமில்லை. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகளினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவை இன்று பரசீலனைக்கு எடுத்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதோடு, இவ்வழக்கிற்காக ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற கட்டணத்தை செலுத்துமாறும் உத்தரவிட்டது.

இதற்கமைய ஒரு மாதத்திற்குள் குறித்த வழக்குக் கட்டணத்தை செலுத்துமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தகர் சமிந்திர தயான் லெனவ என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget