Ads (728x90)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் 61 உறுப்பினர்கள் ஆதரவும், 11 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர்கள் 72 பேர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எதிர்வரும் ஆகஸ்ட் 5 அல்லது 6ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget