தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் ஸ்மிறிரி மன்டானா அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் கவிஷா டில்ஹாரி 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் கர்ஷிதா சமரவிக்கிரம ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் சமாரி அத்தபத்து 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
9-வது பெண்கள் ரி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புள்ளயில் நடைபெற்று முடிந்துள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியாவும், இலங்கையும் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment