Ads (728x90)

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ருவன்வெலவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பல முன்னாள் தலைவர்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை நீக்கம் குறித்த வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தை அடிப்படையாக கொண்ட அமைப்புமுறையை அறிமுகப்படுத்துவேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget