Ads (728x90)

கடந்த 24-ந்தேதி பிரான்சில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும் எனவும், பிரான்சை விட்டு வெளியேறக் கூடாது என்றும் நீதிமன்றால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகளை பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். இதையடுத்து பாவெல் துரோவுக்கு பிணை வழங்கி நீதிபதிகள், வாரத்திற்கு 2 முறை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கைதுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget