Ads (728x90)

இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் குரோதி வருட மகோற்சவ பெருவிழா இன்று முற்பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 

குறித்த மகோற்சவ பெருவிழா இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை 27 நாட்கள் நடைபெறவுள்ளது. 

01 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 02 ஆம் திகதி காலை தீர்த்தத்திருவிழாவும், அன்றைய தினம் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.

இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget