Ads (728x90)

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில் தேர்வு தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் முதல் வினாத்தாளின் புகைப்படங்களை தனிநபர்கள் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

படங்களைப் பகிர்ந்ததாகக் கூறி உதவிக் கண்காணிப்பாளர் மற்றும் 6 ஆசிரியர்கள் அவர்களது கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை கைத்தொலைபேசி மூலம் பிரதியெடுத்த சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார். 

தேர்வு மீதான நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் மற்றும் வினாத்தாள் வெளியானதற்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget