குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரச்சார காலம் முடிவடைந்தபின் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரச்சாரம் செய்தல் அனுமதிக்கப்படாது. எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களும் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வாக்களித்தல், வாக்கெண்ணுதல் மற்றும் பெறுபேறு வெளியிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment