கொழும்பு கோட்டை – யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கு இடையிலான புகையிரத சேவைகள் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை 05.45 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் மதியம் 01.10 மணியளவில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை சென்றடைந்தது.
வடக்கு புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் புகையிரத குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு புகையிரத திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய நிதியுதவியுடனான மஹவ- ஓமந்தை புகையிரத பாதை புனரமைப்பு அபிவிருத்தி பணிகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் காலப்பகுதியில் அபிவிருத்தி பணிகளுக்காக கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கொழும்பு கோட்டை காங்கேசன்துறை புகையிரத சேவை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை 05.45 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் மதியம் 01.10 மணியளவில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை சென்றடைந்தது.
செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் புகையிரதம் மாலை 06.30 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.
Post a Comment