Ads (728x90)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.

புதிய அமைச்சரவை 21 பேருக்கு மட்டுப்படுத்தப்படுவதோடு பாதுகாப்பு, நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு,

1.ஹரிணி அமரசூரிய (பிரதமர்) – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி 

2.விஜித ஹேரத் - வெளிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு                 மற்றும் சுற்றுலாத்துறை

3.சஞ்சன அபேரத்ன - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்                               உள்ளூராட்சி சபைகள்

4.ஹர்ஷண நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு

5.சரோஜா சாவித்திரி போல்ராஜ் - மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம்

6.கே,டி.லால்காந்த - விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசனம்

7.அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு

8.ராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்

9.உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக        வலுவூட்டுகை

10.சுனில் ஹந்துன் நெத்தி - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை     அபிவிருத்தி

11.ஆனந்த விஜயபால - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற                     அலுவல்கள்

12.பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்

13.ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்

14.நளிந்த ஜயதிஸ்ஸ- சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகம்

15.சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு

16.சுனில் குமார கமகே- இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை

17.வசந்த சமரசிங்க – வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு         அபிவிருத்தி


Post a Comment

Recent News

Recent Posts Widget