இவை கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சியை மாற்றும் பணிகளில் அதிக அளவில் உதவுகின்றன.
மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. மங்குஸ்தான் பழங்களை அதிகமாக சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் நீங்கும்.
மங்குஸ்தான் பழத்தின் தோலைக் காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமடையும்.
உணவு குழாயில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கொல்லும். சிறுநீர் நன்றாக வெளியேற்றக் கூடிய சக்தி மங்குஸ்தான் பழத்திற்கு உள்ளது.
கணினியில் வேலை செய்யும் இளைய தலை முறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சல் உண்டாகும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்கு உள்ளாவர்கள். இதுபோன்ற வலிகள் இருப்பவர்கள் மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் நீங்கி நரம்புகள் பலம் பெறும்.
எனவே மங்குஸ்தான் பழங்களைத் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருவது கண் பார்வை திறனுக்கு மிகவும் உகந்தது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த வரபிரசாதம். மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
Post a Comment