Ads (728x90)

நாடாளுமன்றத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

பொதுத்தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு விசாரணைகளுக்காக இன்று உயர்நீதிமன்றில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தில் சிவில் அமைப்பு ஒன்றினால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது அத்துடன் பொதுத்தேர்தல் திகதி தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து.


Post a Comment

Recent News

Recent Posts Widget