Ads (728x90)

2022 - 2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2028 ஆம் ஆண்டளவில் கடன் மீளச்செலுத்தப்படவிருப்பதால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும் என்ற எண்ணம் தோற்றுவிக்கப்படுகிறது. 2028 ஆம் ஆண்டிலும் எமது அரசாங்கமே இருக்கப்போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எமது வௌிநாட்டு கையிருப்பை 2028 ஆம் ஆண்டளவில் 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் நாம் இருக்கிறோம். 15.1 டொலர் பில்லியன் வெளிநாட்டுக் கையிருப்பை ஈட்டிக்கொள்ள முடியும் என்ற வலுவான நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

உரிய திட்டத்தின் பிரகாரம் தனியார் வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அனுமதி வழங்குகின்றோம்.  

பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாவது மீளாய்வை ஆரம்பித்ததாகவும், அதில் இரண்டாம் மீளாய்வில் இணங்கிய விடயங்களில் பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உழைக்கும் போது அறிவிடப்படும் வரி ஒரு இலட்சம் என்ற வரையறை மூன்றாம் மீளாய்வின் போது ஒன்றரை இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் ஒன்றரை இலட்சம் மாதாந்தம் சம்பளம் பெறுவோருக்கு 100 வீதம் வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2 இலட்சம் சம்பளம் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு 71 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டரை இலட்சம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் ஒருவருக்கு 61 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, 3 இலட்சம் சம்பளம் பெறும் ஒருவருக்கு 47 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

மூன்றரை இலட்சம் சம்பளம் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு 25.5 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்கிணங்க, அதிக வருமானம் பெறும் ஒருவருக்கு குறைந்த நிவாரணமும், குறைந்த சம்பளத்தை பெறும் ஒருவருக்கு அதிக நிவாரணமும் கிடைக்கும் வகையில் உழைக்கும் போது அறவிடும் வரியில் திருத்தம் மேற்கொள்ள இணங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் தனிநபர் வருமான வரி முதலாம் கட்டம் 5 இலட்சத்தில் இருந்து 10 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாமதம் இன்றி உர மானியத்தை வழங்குவதற்கான கலந்துரையாடலை ஆரம்பித்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget