Ads (728x90)

மாகாண சபைத் தேர்தலை 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை இரத்து செய்வதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் முறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை இரத்து செய்து பழைய மாகாண சபைத் தேர்தல் முறைக்கு மாற்றுவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்குப் பின்னர் தான் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்பார்க்க முடியும். எனினும் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால் நாங்கள் மாகாண சபைகளுக்கான தேர்தல் செயற்பாடுகளை தொடர முடியாது. 

அதன் அடிப்படையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் முன்னாள் அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை முன்னெடுப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை அவசியமாகிறது. ஆனால் அச்செயற்பாடு முழுமையாக முடிந்திருக்கவில்லை. 

அத்தோடு அவ்விடயம் ஒரு நகைச்சுவையாக மாறியுள்ளது. ஆகவே தான் அந்த ஏற்பாடுகளை திருத்தியமைத்து பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget