நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலக்குழு மற்றும் போதைப்பொருள் கடத்தலையும் இல்லாதொழிக்க எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு முன் வெளிப்படுத்த முடியாது என அங்கு அவர் தெரிவித்தார்.
பாதாள உலக்குழு, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றின் கீழ் சம்பளம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் இருக்கின்றனர். ருவன்வெல்ல முழுப் பொலிஸாரையும் மாற்ற வேண்டி ஏற்பட்டது. புலனாய்வு தகவல்களின்படி அவிசாவளையில் இவர்களுக்கு ஒரு வலையமைப்பு. பாதாள உலக்குழுக்களிடம் இருந்து பணம் பொலிஸாரின் கைகளுக்கும் செல்கிறது.
நாங்கள் பொலிஸ் மா அதிபரை அழைத்து கலந்துரையாடினோம். இப்போது பாதாள உலகக்குழுவை வழிநடத்துபவர்கள் மத்துகமவில் இருக்கிறார்கள்.
இதை ஒரு பிரச்சனையாகவே பார்க்கிறோம். நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்த முடியாது. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக்குழு தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
பொது மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்குமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம். இதில் குறுகிய சந்தர்ப்பவாத அரசியலும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
Post a Comment