Ads (728x90)

2025 பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் 115,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 367,804 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதன்படி இந்தியாவிலிருந்து 59,391 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 48,411 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 34,655 சுற்றுலாப் பயணிகளும்,ஜெர்மனியிலிருந்து 23,280 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 22,670 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 20,078 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 13,799 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget