ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறை சபைக்கான உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறைக்குழு தலைவர் உட்பட 17 உறுப்பினர்களைக் உள்ளடக்கியுள்ளது.
உள்ளூர் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள், உள்ளூர் மருந்து கடைகள், உள்ளூர் மருத்துவ உபகரணங்கள், உள்ளூர் மருத்துவ மற்றும் அழகுசாதன உற்பத்தி, உள்ளூர் ஆயுர்வேத மருந்துகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, உள்ளூர் மருந்துகளின் சேமிப்பு மற்றும் போக்குவரத்து, மூலிகைகள் சாகுபடி ஆகியவற்றை இந்த நிறுவனம் ஒழுங்குபடுத்துகிறது.
மேலும் ஆயுர்வேத மருந்துகளுக்கான தொழில்நுட்பக்குழு, ஆயுர்வேத தொழிற்சாலையின் சேமிப்பு மதிப்பீட்டுக்குழு, சந்தை ஆய்வுக்குழு, மருத்துவ மூலிகைகள் மதிப்பீடு செய்வதற்கான அலுவலர்கள் குழு ஆகிய நான்கு குழுக்களும் ஆயுர்வேத மருந்துக் குழுவின் முழு மேற்பார்வையில் செயல்படுகின்றன.
இதன்போது அமைச்சர் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஆயுர்வேத துறையின் ஒழுங்குமுறை பொறுப்பிலிருந்து விலகியிருக்கும் போது தரமான மற்றும் உயர்தர பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை தற்போது அது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் உட்பொருட்களை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் புதிய உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
Post a Comment