Ads (728x90)

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது முன்னுரிமை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் நேற்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்காது. எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய ஒரு வாகனத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும் அவர்கள் வாகனத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget